வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 430 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் 270சிறுமிகளும், 150சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போன குழந்தைகளில் இதுவரையில் 225சிறுவர் சிறுமியர் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சிறுவர் சிறுமியரை இன்னமும் காணாவில்லை எனவும், தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அநேகமான சந்தர்ப்பங்களில் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அனுராதபுர பிரதேசத்தில் அதிகளவு சிறுவர் சிறுமியர் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 12முதல் 18வயது வரையிலான சிறுவர் சிறுமியரே அதிகளவில் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுமியர் பாலியல் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக