தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு வியட்நாம் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசு வியட்நாம் புலனாய்வுத்துறையினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அந்நாட்டு அரசு இலங்கையுடன் இணைந்து செயற்படு வதாக உறுதியளித்தது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர் பில் இலங்கை அரசு, வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்புக் கோரியுள்ளது. பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன தலைமையிலான குழுவொன்றுக்கும் வியட் நாம் வெளியுறவு அமைச்சருக்குமிடையி லான சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வியட்நாம் இணக்கம் வெளியிட்டுள் ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இதன்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டமைக்கு வியட்நாம் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை வியட்நாமின் இலங்கைக் கான தூதரகம் மீண்டும் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் திறக்கப்படும் என லங்கா பிஸ்னஸ் ஒன் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான 40 வருட இராஜதந்திர உறவுகளைப் புதுபிக்கும் நோக்கில் இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக