இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
இத்தாலியில் வாழ் இலங்கையர்கள் ஒன்றியம் என்கிற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு வாபஸ் பெறப்பட வேண்டும், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ. எஸ். பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைக்களை முன்வைத்து இவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக