திங்கள், 26 ஜூலை, 2010

சிங்களவரின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சுவிசில் நடந்தேறியது !

இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.



இத்தாலியில் வாழ் இலங்கையர்கள் ஒன்றியம் என்கிற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு வாபஸ் பெறப்பட வேண்டும், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ. எஸ். பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைக்களை முன்வைத்து இவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக