இச்சம்பவம் கடந்த 23ஆம் திகதி வெள் ளிக்கிழமை இரவு வவுனியா தோணிக்கல் வீதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
வவுனியா வாடிவீட்டு உரிமையாளரான தோத்ணிக்கல், சிவன் கோயிலடியைச் சேர்ந்த
மாரிமுத்து கதிர்காமராசா (வயது48) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழமைபோல தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குச் சமீபமாக வைத்து வெள்ளைவானில் வந்தோரால் வழிமறிக்கப்பட்டுக் கடத்தப்பட்டார்.
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் இவரது கைத்தொலைபேசி மூலம் கடத்தல்காரர்களால் இவரது குடும்பத்தாருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. கப்பம் வழங்கவேண்டும் என்று அவர்களிடம் கோரப்பட்டது.
இதனையடுத்து ஆறுலட்சம் ரூபா கப்பம் செலுத்தப்பட்டது பின்னர் குறித்த நபர் விடுவிக்கப்பட்டதாக அறியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக