புதன், 28 ஜூலை, 2010

இலங்கை அரசின் புதிய விலைஉயர்ந்த புதையல் குமரன் பத்மநாதன் .....உபயோகமில்லாத முன்னாள் டம்மி கேணல் விநாயகமூர்த்தி ( இவ் இருவரும் செய்தது செய்கின்றது செய்யப்போவது அனைத்தும் தமிழினத்துக்கு சேறுபூசும் வேலை ...)

விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரிய பொக்கிஷமாக பயன்படுத்தப்பட்ட கருணாவுக்கு சிறிலங்கா அரசு ஒரு காலத்தில் சகல விதமான செளபாக்கியங்களையும் அள்ளி இறைத்தது. விடுதலைப்புலிகளின் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் போலியான கடவுச்சீட்டில் லண்டனுக்கு அனுப்பியது. பின்னர் அங்கிருந்து வந்தவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியது. சிங்கள அரசியலின் ஆதிக்க பீடங்களில் ஒன்றான சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியையே தாரைவார்த்து கொடுத்தது. அதன்பின்னர்,
அமைச்சுப்பதவி கொடுத்தும் அழகு பார்த்தது.


பிராயச்சித்தமாக, இந்தியாவையும் நோர்வேயையும் விடுதலைப்புலிகள் கடந்த காலங்களில் தவறாக பயன்படுத்தினர் என்று கருணாவின் ஊடாகவே விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச பிரசார பணிகளையும் மகிந்த தரப்பு மேற்கொண்டது.


போர் முடிவடைந்த பின்னர் அரசுக்கு கருணா கிட்டத்தட்ட தேவையற்ற மனிதராக பார்க்கப்பட்டபோதும், கிழக்கு மாகாணசபையையும் அவரது செல்வாக்கை பயன்படுத்தி வென்றுவிடவேண்டும் என்று மகிந்த தரப்பு கருணாவை வைத்து தனது கடைசி முயற்சியையும் மேற்கொண்டு அதில் வெற்றி கண்டது.


தற்போது, கருணா அறவே தேவையற்ற மனிதராகிவிட்டதால், அவரை ஒதுக்கிவிட்டு, இப்போதைக்கு தனது பொக்கிஷமான கே.பியை பயன்படுத்தி தனது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசு தயாராகிவிட்டது.


போர் முடிவுற்று ஒரு வருடமான பின்னரும்கூட சிறிலங்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் சக்தியை சிதைக்கவும் கிழக்கை விட முக்கியமான வட மாகாணசபை தேர்தலில் வெற்றிபெறுவதுமே அரசின் தற்போதைய பிரதான இலக்குகளாக வகுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், அதற்கேற்றவாறான மறைமுக நடவடிக்கைகள், மந்திராலோசனைகள், மர்ம சந்திப்புக்கள் ஆகியவை முழு அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

3 கருத்துகள்:

  1. பாண்டியன் பிரித்தானியா28 ஜூலை, 2010 அன்று AM 10:17

    பணம் என்னும் ஆசையால் வந்த ஒட்டுக்குழுக்கள்..... பதவி என்னும் ஆசையால் வந்த ஒட்டுக்குழுக்கள் .......காமம் என்னும் ஆசையால் வந்த ஒட்டுக்குழுக்கள்....... நாளும் அழிகிறது இவர்களால் தமிழினம். உலகத்தமிழினம் இதைப்பார்த்து மனம் நோகிறது நிச்சயமாக எதிர்காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு......
    ..

    பதிலளிநீக்கு
  2. NAAM ELLAAM THAMILAR enra ennam elloorukkum varum varai thurookankal thodarnthu konde irukkum [ATHU 4 AAVATHU THALAI MURAIYILEYE VARUM]

    பதிலளிநீக்கு