ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது.
பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இந்தியப் பிரதிநிதிகளை அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக முதல்வர் கருணாநிதி மூலமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே சனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன் படியே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். என்றார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக