ஞாயிறு, 4 ஜூலை, 2010

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!

புனலிலும் அனலாய் கனன்றிடும்
புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!!


தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ
தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!
வெஞ்சின கரு வேங்கைகளே...!!!
வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...



வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை
எழுச்சி கொள்ள வைத்திட…
வீரத்தலைவனின் வழிகாட்டலில் - நெருப்பாய்
எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்...!!!


காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர
காலனுக்கே சவால் விட்டு – தம் மரணத்திற்கு தாமே
கால நேர இடம் குறித்து,,,
காவியம் படைக்கும் சரித்திர நாயகர்கள்...!!!


அழுத்த மனதுடனும்,,
அமுக்க உடலோடும்,,
அன்பாய் கதை பேசி
அரவணைத்து - எம்மை
அழ வைத்து அலை அலையாய்
அணி திரண்டு செல்லும் கரு முத்துக்கள்...!!!


புன்னகைத்து கையசைத்து சாவினைத்தேடிப்போகும்
புதிய இலக்கண வீர மறவர்கள்…!!!


நெருப்பின் வயிற்றிலே கருத்தரித்து,,
நெருப்பாகி...காற்றோடு கலந்திடும் புது மனிதர்கள்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக