ஞாயிறு, 4 ஜூலை, 2010

கற்பனை களநிலவரங்கள் எழுதுவோர்க்கு ..............!

தமிழர் துயர்கள் நீங்காத இக்காலத்தில் களத்தில் இருக்கும் போராளிகளைப் பற்றிய கற்பனை
கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ
என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே
எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது
வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய
உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது.மேலும் மனித
உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக
காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய
வகையில் தமிழ் அமைப்புக்கள் உருவாகி உள்ளன உங்கள் ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக
செயல்படுவதே தமிழின ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு.தாய் நாட்டுக்காக தம் உணர்வுள்ள தமது உடலை வெடிக்க வைத்த
கரும்புலிகள் வாழ்ந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் நாடுப்பற்று!இல்லாதோர் தங்கள்
சுயநல வாழ்கையை மட்டும் கவனம் செலுத்துவதே அவர்களுக்கும் தமிழினத்துக்கும் அவர்கள் செய்யும் நன்மை.
கரும்புலிகள் நாளாகிய இன்று நாம் எடுக்கவேண்டிய உறுதி பிரிந்து நிற்கும் நாம் ஒன்றிணைந்து* எம்மின துயர் போக்கல்
என்ற சொற்பதமே.
.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக