தமிழினத்திற்காய்... தம்முயிரைத்
தியாகம் செய்த எம் கரும்புலிகள்....
கடற்கரும்புலிகள்....
தரைக்கரும்புலிகள்....
வான் கரும்புலிகள்....
இவர்கள் எல்லோருக்கும்.
எம் இதயம் கனிந்த....
கண்ணீர் அஞ்சலிகள்.
இவர்களுக்காய்...
என் சிறு கவித்துளி....
இது எம் கண்ணீர்த் துளியும் கூட...
அனைத்து உள்ளங்களும்...
உங்கள் கண்ணீரை.... இங்கே வந்து கொட்டுங்கள்....
பலரின் குமுரல்கள்.....
இதில் கலக்கப்படட்டும்....இது நானில்லையே......
இது நாமில்லையே.....
இது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக