வெள்ளி, 7 மே, 2010

கடத்தப்பட்ட 11 வயது மாணவி மீட்பு

யாழில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 11 வயது மாணவி நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இன்று கடத்தப்பட்ட மாணவி மானிப்பாயில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினர் இவரை மீட்டுள்ளனர். நவாலி விவேகானந்தா வித்தியாலய மாணவியான இவரை சைக்கிளில் வந்தவர்களே கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவர் காணாமல் போனது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இராணுவத்தினர் மானிப்பாய் பிரதேசத்தில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் இதன்போதே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக