வெள்ளி, 7 மே, 2010

தி.மலவரயனின் கருத்துக்கு.............

அன்புள்ள, ஊடக நண்பர்களே, இரு தினங்களாக 'தி.மழவராயன்' என்கிற நாமத்தில் ஒரு, தமிழ் தேசிய இந்திய அடிவருடி மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருப்பார். பல நண்பர் அதனை என் பார்வைக்கு திருப்பிவிட்டார்கள். என்னைப்பொறுத்தவரை, இது போன்ற அனாமதேயங்களுக்கு பதில் சொல்வதில்லை . நான் கணனிக்கு முன்னால் குந்தியிருந்து எழுதுகிறேனா.. அல்லது கடந்த கால போராட்ட படிப்பினைகளை வைத்து எழுதுகிறேனா.. என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எழுதிய நாடு கடந்த தேசியத்துவம் பற்றிய கட்டுரையை இவர் படிக்கவில்லை போல் தெரிகிறது. இவரின் அவதூறுக்கடிதத்தில், யாழ் மேட்டுக்குடி ஆதிக்க மனோபாவம் [ மன்னிக்கவும் தாயக ஒருமைப்பாட்டை நேசிக்கும் எனது யாழ் நண்பர்களே] அளவிற்கு மிஞ்சி தொனிக்கிறது. இந்தியாவையும், கூட்டமைப்பையும் காப்பாற்றும் அதேவேளை, நாடுகடந்த அரசாங்கத்துள் வேறு யாரும் இணையாமல் தாங்களே அதிகாரம் செலுத்தவேண்டும் என்கிற ஆதங்கமும் இந்த மனிதரிடம் தெரிகிறது. இந்த முகமூடி ஊடக மபியாக்களையிட்டு நான் அஞ்சப்போவதில்லை. இவர் விரும்பினால் எனது TAX OFFICE REFERENCE NUMBER ஐ அனுப்பலாம். அடிவருடிகளிடம் காசு வாங்கிக்கொண்டு எழுதி வாழ்வதுதான் கொடுமை. இவருக்கு நான் பிறந்த திருமலை மண் பற்றி என்ன தெரியும்? ஒருதடவையாவது அந்த 'சீலன்' பிறந்த மண்ணிலோ அல்லது மட்டக்களப்பிலோ இவர் காலடி வைத்திருப்பாரா? என்ன... கொஞ்சம் பொறாமை, வெறுப்பு, தாழ்வுச்சிக்கல், அரசியல் வெறுமை, செத்த வீட்டிலும் தானே பிணமாக இருக்க வேண்டுமென்கிற கிறுக்குத்தனம்... என் எழுத்து யாரையோ பலமாக உதைக்கிறது. எனது பெயர் கூட அவருக்கு ஒழுங்காகத் தெரியவில்லை. நல்ல புலனாய்வு புரோகிதர்.. நன்றி இதயச்சந்திரன்

2 கருத்துகள்: