இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 7 மே, 2010
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக