பகைவனிடம்
சிறைகூடமும்
சித்ரவதையும்
கொலைக்கருவியும்
குவிந்து கிடக்கலாம்.
எங்களிடம்
விடுதலையின்
கனவுகளும்
கவிதைகளும்
எல்லையில்லாமல்
விரிந்திருக்கிறது.
எங்கள்
கவிதைகளையும்
கனவுகளையும்
உங்கள்
கொலைக்கருவி
தோற்கடிக்க முடியாது.
எங்கள்
கவிதைகளை
சிறைப்பிடிக்க
உங்கள்
அநியாயத்திற்கு
ஆற்றல் இல்லை.
எங்கள் கனவு
இதழ் விரிக்கும் முன்
எங்கள் உயிர்மூச்சு
நின்றுப்போகலாம்.
ஆனால் எமது
உறவுகளின் விழிகள்
குருதியில் விளைந்த
அழகிய தேசத்தை
ஆண்டு மகிழும்.
இன்றைய அற்புதங்கள்
நேற்றைய கனவின்
அடையாளங்கள்.
இன்றைய எங்கள் கனவு
நாளை எங்கள்
அழகிய நாடு.
அடக்குமுறைக்கு
தலைசாய்க்காது
எங்கள் எழுதுகோல்.
நாங்கள்
புலிகளின் உறுமலை
கவிதையாக வடிக்கிறோம்.
எமது உரிமையின் தாகத்தை
வரிகளாக கொடுக்கிறோம்.
விழுவோம், எழுவோம்.
ஆனால் வெற்றி
எங்கள் பக்கத்தில்
அமர்ந்துவிட்டது.
மூடிக் கிடந்த
விடுதலையின் கதவுகள்
அகலத்திறக்க
சாவியாய் வந்தான்
என்றும் சாவில்லா
எம் தலைவன்.
இருட்டைக் கிழித்து
ஒளியைப் பாய்ச்ச
பரிதியாய் முளைத்தான்
தவப்புதல்வன்.
ஒடுங்கிக்கிடக்க
இலக்கம் இல்லா
இல்லம் அல்ல
எம் இனம்.
முழு நிலவாய்
முகவரியாய்
எம் தலைவன்
இருக்கும்போது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக