அண்மைக்காலமாக யாழ்.நகருக்குள் சோதனை நடைமுறைகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தாங்கள் வெற்றிகொண்டுவிட்டதாக
சிறிலங்கா அரசு தரிவித்த பின்னர் சிறிது சிறிதாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா படையினரின் சோதனைக்கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.
ஆனால், தற்போது சோதனை என்ற பெயாரில் மக்கள் மீது நெருக்கடிகளையும் அசௌகாரியங்களையும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பாக யாழ்.குடாநாட்டு பகுதிகளில் மீண்டும் மக்கள் மீது சோதனை நடைமுறைகளளை படையினர் மேற்கொண்டு வருவது அம்மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா படையினரால் திடீர் திடீர் என சில பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்களும் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. இருந்தபோதும் ஏ-9 சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் வழமைபோன்றே மேற்கொள்ளப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக