புதன், 15 டிசம்பர், 2010

படையினரின் சோதனைக்கெடுபிடிகள்!

அண்மைக்காலமாக யாழ்.நகருக்குள் சோதனை நடைமுறைகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தாங்கள் வெற்றிகொண்டுவிட்டதாக
சிறிலங்கா அரசு தரிவித்த பின்னர் சிறிது சிறிதாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா படையினரின் சோதனைக்கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.


ஆனால், தற்போது சோதனை என்ற பெயாரில் மக்கள் மீது நெருக்கடிகளையும் அசௌகாரியங்களையும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பாக யாழ்.குடாநாட்டு பகுதிகளில் மீண்டும் மக்கள் மீது சோதனை நடைமுறைகளளை படையினர் மேற்கொண்டு வருவது அம்மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா படையினரால் திடீர் திடீர் என சில பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்களும் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. இருந்தபோதும் ஏ-9 சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் வழமைபோன்றே மேற்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக