விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு ஈழத் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய ஊடகங்களும் சில சக்திகளும் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தடை நீடிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை தெரிந்ததே.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கப்பட்டதை மத்திய தீர்ப்பாயம் உறுதி செய்திருந்தது. அந்த தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரும் வைகோவின் மனு மீது விசாரணை நடந்தது. தமது மனுவை தீர்ப்பாயம் நிராகரித்தது சரியல்ல என்று நீதிமன்றத்தில் வைகோ வாதிட்டிருந்தார்.
வைகோ மனு மீதான வழக்கில் 3 வாரத்தில் பதில் அளிக்க இந்திய உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.மத்திய அரசு புலிகளுக்குச் சாதகமான முடிவினை எடுத்துவிடலாம் என்ற அச்சம் காரணமாக விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தடை நீடிப்புத் தீர்ப்பினை வலுப்படுத்தும் நோக்கானதென்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக