வவுனியா அரச செயலகத்தில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் காணாமல் போயிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா அரச செயலகத்தின் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகின்ற 27வயதுடைய ஜெயசீலன் ஜெயப்பிரவீணா என்ற பெண் குருமன்காட்டிலுள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்றுக் காலை பணிக்கெனப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.
அவ்வாறு சென்ற அவர் அரச செயலகத்தினைச் சென்றடையவில்லை என்ற அப் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வவுனியா பொலிஸாரிடம் தாயாரினால் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா சேமமடுவினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வெள்ளைவான் ஒன்றில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று முதல் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்ற பெண்ணும் சேமமடுப் பகுதியினைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக