புதன், 15 டிசம்பர், 2010

அரச செயலகப் பணியாளரான இளம் பெண்ணைக் காணவில்லை! வவுனியாவில் சம்பவம்!

வவுனியா அரச செயலகத்தில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர்  காணாமல் போயிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா அரச செயலகத்தின் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகின்ற 27வயதுடைய ஜெயசீலன் ஜெயப்பிரவீணா என்ற பெண் குருமன்காட்டிலுள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்றுக் காலை பணிக்கெனப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.
அவ்வாறு சென்ற அவர் அரச செயலகத்தினைச் சென்றடையவில்லை என்ற அப் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வவுனியா பொலிஸாரிடம் தாயாரினால் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா சேமமடுவினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வெள்ளைவான் ஒன்றில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று முதல் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்ற பெண்ணும் சேமமடுப் பகுதியினைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக