யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் மீள் குடியேற்றத்திற்காக புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர்.
"வளமான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்" என்ற அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.
இதன் முதற்கட்டமாக 150 குடும்பங்களின் தலைவர்கள் மீள்குடியேற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களது குடும்பத்தினர் சில தினங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முதற்கட்டப் பயணக் குழுவில் குழுவில் யாழ். மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ.பஷீரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக