ஈழத்தமிழர் இதயங்களில்
இமயமானவள் நீ
வாழ்ந்த போதும் இனத்திற்கு
வளங்கள் செய்தவள் நீ
வாழ்வு முடியும் போதும்
முடிந்த போதும் காவியமானவள் - நீ
இறந்த பின்னும் இனத்திற்கு
இனிதே செய்தவள் - நீ
உன் உருவம் கண்ட உலகிற்கு
எமது உரிமை சொன்னவள் - நீ
நெஞ்சை உருக வைத்தவள் - நீ
கலக்கமில்லா எண்ணம் கொண்ட
ஓவிய பெண் அவள் - நீ
இழக்க முடியா இழப்பை எல்லாம்
எமக்காய் இழந்தவள் - நீ
உடைந்து உருகி உணர்வைப் பிழிந்து
நன்றி கூறுகின்றோம்.
நன்றி என்ற வார்த்தை மட்டும்
நன்று இல்லையடி
உலகில் இறைவன் என்றொருவன்
எமக்கு வேண்டுமென்றால்
உன் உருவம் அன்றி வேறெதையும்
எம் இனம் கொண்டிடுமோ?
முடிந்து விழுந்து மடிந்த பின்னும்
உன் காலடி நாம் தொழுவோம்!
இந்த உலகம் இருக்கும் இறுதிக்கணமும்
உன் பெயர் நாம் மறவோம்
தமிழ் அன்னை உன் வடிவே என்று கொண்டுனை
அம்மா என்றிடுவோம்
தமிழ் அன்னை நீ என்றிடுவோம்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக