சங்கானையில் குருக்களும் அவரது மகன்களும் படைச் சிப்பாய்கள் இருவரின் உதவியுடனேயே சுடப்பட்டுள் ளனர். சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய இராணுவத்தின் கோப்ரலான குணசேன, சிப்பாய் ரட்ணாயக்க இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாயில் பணியாற்றும் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ரி56 துப்பாக்கிகளை சந்தேக நபர்களுக்கு வழங்கி உள்ளார். அவர் சிகரெட் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர். மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்'
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பின்னர் இராணு வத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற இருவரே சம்பவத்தில் ஈடுபட்டசந்தேக நபர்கள் சக்தி என அழைக்கப்படும் காசிநாதன் முகுந்தன், ரமணன் என அழைக்கப்படும் பாலசுப் பிரமணியம் சிவரூபன் ஆகிய சந்தேகநபர்களே கைது செய் யப்பட்டுள்ளனர். இவர் களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவத்தின் கோப்ரலான குணசேன, சிப்பாய் ரட்ணாயக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக