இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 10 டிசம்பர், 2010
போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படத்தில் போராளியொருவர் தற்போது அடையாளம் காணப்பட்டார்.!!!!!!
மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரசேனன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார் 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,,புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,, போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார்.. மேலும் இவரது சகோதரனான சந்திரசேனன் -விருந்தன் வயது 18 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தால் கைது செய்ய பட்டு காணமல் போய்யுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக