இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 பிப்ரவரி, 2010
கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பிரதமர்.
லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பலமுறை உணர்ச்சி வசப்பட்டதுடன், ஒரு கட்டத்தில் இறந்த தனது மகள் ஜெனீபர் பற்றி கூறுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் குழந்தையாக குறை பிரசவத்தில் ஜெனீபர் பிறந்தாள். ஆனால் பிறந்த 10 நாட்களிலேயே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக இறந்து விட்டாள்.
தற்போது இவரது 3 வயது மகன் பிரசாரும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். அவனது உடல் நிலையும் மோசமாக உள்ளது. எனவே தான் அவர் கதறி அழுதார்.
அப்போது அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். கணவர் பிரவுன் அழுவதை பார்த்து அவரும் கதறி கண்ணீர் விட்டார். இச்சம்பவம் டி.வி. நிலைய ஊழியர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக