இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 பிப்ரவரி, 2010
கோஸ்டாரிகா நாட்டின் முதலாவது பெண் அதிபர்
அமெரிக்கக் கண்டத்தில் கோஸ்டாரிகா நாடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தேசிய விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாரா சின்சிலா வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கோஸ்டாரிகா நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதி புதிய அதிபராகப் பதவி ஏற்கிறார்.
50 வயதான இவர், அரசியல் அனுபவம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் தற்போது அதிபராக இருக்கும் அரியாஸ் அமைச்சரவையில் மந்திரி உள்ளிட்ட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்சிலாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது,
“நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். வார்த்தகத்தை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன்” என்று உறுதி அளித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக