இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 பிப்ரவரி, 2010
தமிழர் தாயகத்தில் எண்ணை அகழிவில் ரஸ்ய நிறுவனம்
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் எண்ணெய் வளத்தை அபகரிக்க சிறீலங்கா அரசு அவசரமாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பல நாட்டு நிறுவனங்களுக்கு எண்ணெய் படிமங்கள் உள்ளதாக கூறப்படும் பகுதிகளை குத்தகைக்கு விட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இறுதியாக ரஸ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் அகழ்வு நிறுவனமான கஸ்பிரோமிற்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழும் அனுமதியை வழங்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சீனா இந்தியா போன்றவை தமக்கான அகழ்வுப் பகுதிகளை வரையறுத்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில் தற்போது ரஸ்யாவும் அதில் இணைந்துள்ளது.
முன்னர் அமெரிக்க அகழ்வு நிறுவனமாக சிவரோன் ரெக்சாக்கோவும் விருப்பத்தை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக