இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 பிப்ரவரி, 2010
தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா தரவில்லை
முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத் தலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்திருந்தது.
முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவழக்கில் தலைவர் வே.பிரபாகரன் பெயர் இருப்பதால் இந்திய அரசு, அவர் மீதான வழக்கை முடிக்க வேண்டும். எனவே, அவரது மரண சான்றிதழை தாருங்கள் என்று சிறீலங்காவிடம் கேட்டு வருகிறது.
இறப்புச் சான்றிதழ் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை என்று மிஸ்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, தலைவர் வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு அனுப்பி விட்டதாக கூறினார்.
இந்நிலையில், தலைவர் வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு தரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக