புதன், 10 பிப்ரவரி, 2010

இலங்கையில் பொலிசாரின் சித்திரவதைகள், கொலைகள் தொடர்கின்றன

இலங்கையில் பொலிசாரின் சித்திரவதைகள், பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் கொலைகள் ஆகியன தொடர்ந்தும் இடம்பெறுவதாக மனித உரிமைகள் சபை கூறியுள்ளது. தனது 50 பக்கம் கொண்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் நீதிமன்றங்கள் எவ்வளவுதான் சட்டங்களையும் விதிகளையும் விதித்தாலும், அறிவுறுத்தல்களை மேற்கொண்டாலும் பொலிசார் அதனை கருத்தில் எடுப்பதில்லை எனவும் மாறாக தாம் நினைத்தபடியே செய்வதாகவும் கூறியுள்ளது. இதனால் அங்கு பொலிசாரின் சித்திரவதைகள், கொலைகள் தொடர்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கையினை மனித உரிமை சபை இயக்குனர் சாமந்தி ஜெயமான அவர்களும் அதன் செயலாளர் புஞ்சிவேவ அவர்களும் தயாரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக