இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 பிப்ரவரி, 2010
இலங்கையில் பொலிசாரின் சித்திரவதைகள், கொலைகள் தொடர்கின்றன
இலங்கையில் பொலிசாரின் சித்திரவதைகள், பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் கொலைகள் ஆகியன தொடர்ந்தும் இடம்பெறுவதாக மனித உரிமைகள் சபை கூறியுள்ளது. தனது 50 பக்கம் கொண்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் நீதிமன்றங்கள் எவ்வளவுதான் சட்டங்களையும் விதிகளையும் விதித்தாலும், அறிவுறுத்தல்களை மேற்கொண்டாலும் பொலிசார் அதனை கருத்தில் எடுப்பதில்லை எனவும் மாறாக தாம் நினைத்தபடியே செய்வதாகவும் கூறியுள்ளது.
இதனால் அங்கு பொலிசாரின் சித்திரவதைகள், கொலைகள் தொடர்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கையினை மனித உரிமை சபை இயக்குனர் சாமந்தி ஜெயமான அவர்களும் அதன் செயலாளர் புஞ்சிவேவ அவர்களும் தயாரித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக