மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவனின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது.
சிறுநீரகத்திற்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றீடு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த சிறுநீரக மாற்று நடவடிக்கையை கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று பிரிவு வைத்திய நிபுணர் பி.கே ஹரிசந்திர தலைமையிலான குழுவே மேற்கொண்டிருந்தது.
இந்த சிறுநீரக மாற்றீடு செய்யப்பட இரண்டு நோயாளிகளினதும் உடல் நிலை தேறி வருவதாக டாக்டர் பி.கே ஹரிசந்திர தெரிவித்தார்.
இரண்டு சிறுநீரகங்களையும் வழங்கியவர் கண்டியைச் சேர்ந்த எம்.யோகராஜன் ஆவார். தனது மகன் உயிர் பிழைக்கமாட்டர் என்று கேள்விப்பட்டவுடன் யோகராஜனின் தாய் தனது மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளதாக வைத்தியர்களிடம் அறிவித்தார்.
இத்தாயின் நடத்தை ஏனையோருக்கு ஒரு முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் திகழ வேண்டும் என டாக்டர் பி.கே ஹரிசந்திர தெரிவித்தார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக