வெள்ளி, 30 ஜூலை, 2010

இலங்கையில் வானொலி நிலையம் தாக்கப்பட்டது!

இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network)இன் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம்., ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.



இத்தாக்குதலின் போது அந்நிறுவனத்தின் செய்திப்பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது இணையத்தள செய்தியாளார் தெரிவித்தார்.


இன்று அதிகாலை 1.20 மணியளவில் முகமூடியணிந்த 12 பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்திற்குள் கூரிய ஆயுதங்களுடனும் நுழைந்ததாகவும், பின்னர் அவர்கள் வைத்திருந்த பெற்றோல் குண்டை செய்திப்பிரிவினை நோக்கி வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக