இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network)இன் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம்., ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இத்தாக்குதலின் போது அந்நிறுவனத்தின் செய்திப்பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது இணையத்தள செய்தியாளார் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் முகமூடியணிந்த 12 பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்திற்குள் கூரிய ஆயுதங்களுடனும் நுழைந்ததாகவும், பின்னர் அவர்கள் வைத்திருந்த பெற்றோல் குண்டை செய்திப்பிரிவினை நோக்கி வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக