தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா தனது பிறந்தநாளை கொண்டாட கடந்த 25 ஆம் திகதி தனிப்பட்ட விமானத்தில் இலங்கை சென்றதாகவும் அவர் கட்டுநாயக்கவில் உள்ள ஏர்போர்ட் கார்டன் விடுதியில் வைத்து அமைச்சர் பசில் ராஜபக்சாவின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவாரத்தைகளை நடத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக பணியாற்றிய கே.பிக்கு கம்போடியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றின் உரிமைகளை
எப்படி பறிமாறிக்கொள்வது என்பது குறித்து பசில் ராஜபக்சவின் பிரதிநிதிகளுக்கும் சினவத்ராவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டில் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள தக்சின் சினவத்ரா தற்போது கம்போடியா அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக