வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக சீன இராணுவம் செல்கின்றது. இவர்கள் ஐந்து வருடம் அங்கு தங்கியிருந்து கண்ணிவெடிகளை அகற்றுவார்களாம்
பசில் இராஜபக்ஷவிற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த சீன இராணுவம் அங்கு செல்கின்றது.
இதற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1500 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் சீன இராணுவம் மேற்கொள்ளும். என்றும் கூறப்படுகின்றது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக