பான் கீ மூன் இரண்டாம் தடவையாகவும் செயலாளர் நாயகமாக பதவி வகிப்பதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஸ்யா, சீனா, சேர்பியா உள்ளிட்ட அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்புடன் பான் கீ மூனின் இரண்டாம் தவணை நியமனத்தை தடுப்பதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் ஓர் கட்டமாக பான் கீ மூனுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏதாச்சாதிகாரமாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு முக்கியத்தும் அளிக்காது, மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாக பான் கீ மூன் செயற்பட்டு வருவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாடுகளின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் பான் கீ மூன் அனாவசியமாக தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்றது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக