இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார்.
எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது” என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைது செய்யப்படுவதாகக் கூறப்படுகின்ற போதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை” என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக