செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அமெரிக்காவில் நிலநடுக்கம் : மக்கள் அலறியடித்து ஓட்டம்

அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 2 லட்சம் பேர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் அமெரிக் காவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோ மாநிலத்தில் உள்ள ஒசாகா மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். 5 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.9 புள்ளியாக இருந்தது. ஒசாகாவுக்கு 23 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் அமைந்திருந்தது. அமெரிக்காவில் கடந்த வாரமும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக