இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
அமெரிக்காவில் நிலநடுக்கம் : மக்கள் அலறியடித்து ஓட்டம்
அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 2 லட்சம் பேர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் அமெரிக் காவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெக்சிகோ மாநிலத்தில் உள்ள ஒசாகா மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். 5 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.9 புள்ளியாக இருந்தது. ஒசாகாவுக்கு 23 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் அமைந்திருந்தது.
அமெரிக்காவில் கடந்த வாரமும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக