இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் கைது
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களித்தமைக்காக நன்றி கூறும் கையேடுகளை விநியோகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சரத் பொன்சேகாவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு கட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகத்தின் முன்னால் இருந்தே கையேடுகளை விநியோகித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக