செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் கைது

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களித்தமைக்காக நன்றி கூறும் கையேடுகளை விநியோகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சரத் பொன்சேகாவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு கட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகத்தின் முன்னால் இருந்தே கையேடுகளை விநியோகித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக