இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
விடுதலை: கவிதை
விடுதலை என்பது
விடுகதை அல்ல
வெற்றியும் எளிதல்ல
எலியாக நாம்
வளை தேடவில்லை
புலியாகி பகைவெல்ல
புறப்பட்டுவிட்டோம்
தடையினை உடைப்போம்
தலைவனை மதிப்போம்
மனதெங்கும் நிறைவான
மாவீரர் புகழ்பாடி
வெற்றிகள் குவிப்போம்
எடுபடையெனவே
படுகளம் ஆடும்
பகையது கொன்று
புதியதோர் சரித்திரம் படைப்போம்
வீரர் நாம்
வேகம்தான் எம் மூச்சு
மண்ணின் மைந்தர் நாம்
மானம்தான் பெரிது
கரிகாலன் வளர்த்தெடுத்த
கரும்புலிகள் நாங்கள்
கணப்பொழுதில்
விடியல் காண்போம்
கடலன்னை தத்தெடுத்த
கடற்புலிகள் நாங்கள்
கடலதிலும் காண்போம்
விடுதலை
வான்மகவு ஈன்றெடுத்த
வான்புலிகள் நாங்கள்
விண்ணேறிப் பெறுவோம்
வியத்தகு விடுதலை
தேசத்தின் குரலால்
தினம் வளர்ந்தவர்கள் - நாங்கள்
தேசம் அதிர
தேசியவிடுதலை காண்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக