செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஈரானுக்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்க மேற்குலக நாடுகள்

ஈரானக்கு எதிராக கடுமையான தடைகளை விதிப்பதற்கு மேற்குலக நாடுகள் ஆயத்தமாகி வருவதாக பி.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. யுரேனியம் உற்பத்தி தொடர்பில் ஈரான் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலோஸ் சார்கோசி மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் ஆகியோர் பாரிஸ் நகரில் ஈரானிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஈரானின் நடவடிக்கைகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஈரானில் அணு உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை ஓர் சாதகமான நிலையாகக் கருத முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென மேற்குலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்கனவே மூன்று தடவைகள் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக