செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

மகிந்த போன்றவர்களை தெரிவு செய்தது மக்களின் தவறு

சரத் பொன்சேக்கா போன்ற நாட்டை விடுவித்த ஒரு யுத்த வீரனுக்கு இழைக்கப்பட்டுள்ளது ஒரு பெரிய அநியாயம் என்றும் இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கர் தெரிவித்துள்ளார். அதே போல உண்மையை அறிவது மக்களின் உரிமை என்றும் அதை எழுதுதுவது ஊடகவியலாளரின் கடமை என்றும் அதை மறைக்கவும் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை சகலரும் கண்டிக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர் கேட்டுள்ளார். இது குறித்து நீங்கள் ஆட்சியாளருக்கு எடுத்துச் சொல்ல முடியாதா என்று கேட்டதற்கு நாம் சொல்வதைக் கேட்பவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இல்லையென்றும் இது போன்றவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறு என்றும் மகாநாயக்கர் தெரிவித்தார். பௌத்தி பீடங்களின் அதிஉயர் பதவியான மகாநாயக்கர் பதவியிலுள்ள தேரரின் இந்தக் கூற்று அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக