செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

பிரித்தானியாவுக்கு சட்டபூர்வ விசாவுடன் சென்ற மாணவன் நாடு கடத்தப்பட்டார்!

பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்வதற்காக கொழும்பில் இருந்து சட்டபூர்வ விசா பெற்று லண்டனுக்கு வருகைதந்த இலங்கை மாணவன் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய விசா ஆவணங்களுடன் மேற்படி இளைஞன் வந்தபோதும் அந்த மாணவனை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். கொழும்பில் இருந்து வந்த மேற்படி மாணவன் விமான நிலையத்தை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததை அறிந்த அவரது உறவினர்கள் இமிக்கிறேசன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மிக நீண்ட நேரமாகியும் மேற்படி இளைஞன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வராததை தொடர்ந்து சட்டஆலோசகரை அழைத்துக்கொண்டு குடிவரவு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முயன்றபோதே மாணவன் கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டுவிட்டார் என்ற தகவல் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய அரசு மாணவர்களுக்கான விசா அனுமதியில் கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்னும் சட்டம் அமுல்படுத்த முன்னரே இவ் மாணவன் நாடு கடத்தப்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக