இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள பல தீவுகளில் இன்று கடுமையான நில நடுக்கம்
தெற்கு ஜப்பானில், கடற்கரையில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள மியாகோஜிமா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் தாக்கத்தை பக்கத்து தீவுகளில் கடுமையாகவும், தைப்பீ உள்ளிட்ட நகரங்களில் லேசாகவும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
பல இடங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3.10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவானதாக ஜப்பான் பூகம்ப ஆய்வியல் மையம் தெரித்தது.
அமெரிக்க புவியயல் ஆய்வு மையத் தகவலின் படி இந்த நிலநடுக்கம் 6.4 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக