ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மகிந்தா மன்றாட்டம்

அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்துடன் தொடர்பில் உள்ளோம் எனவே அதற்கு தேவையான உதவிகளை செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம் என மாட்டின் மகிந்தாவிடம் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா உணவையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.எனினும் சிறீலங்காவுக்கான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்குமான என கேட்கப்பட்டபோது அதனை நாம் எதிர்பார்க்க முடியாது, எனினும் அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுஅமைப்புக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளை மாட்டின் சந்தித்திருந்தார். அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது போர் அடிமட்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பெருமளவான மக்கள் பதிப்படைந்துள்ளனர். நான் வடக்கிற்கு சென்றிருந்தேன், எனது குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கும் சென்றிருந்தனர். நான் மல்லாவிக்கும், கிளிநொச்சிக்கும் சென்றிருந்தேன் அங்குள்ள மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களிடம் போரின் அச்சம் அகலவில்லை. எனினும் போர் நிறைவுபெற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியானதே தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக