இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
தேசத்திற்கு தொழில் நுட்பம்
யாழ் தீவுப்பகுதிகள் மற்றும் தலை மன்னார் பகுதிகள் பாக்கு நீரிணையின் ஒடுக்கமான பகுதிக்குள் வருகின்றன. இந்த பாக்கு நீரிணையானது வட கிழக்காக வங்காள விரிகுடாவினுள் விரிகின்றது. தென்மேற்காக இந்து சமுத்திரத்தினுள் திறக்கின்றது. இவ்விரு திறந்த நீர்பரப்புகளும் நமது தீவுப்பகுதிகளை அண்டி ஒடுங்குகின்றன. இது ஒரு புனலின் ஒடுக்கமான பகுதிக்கு ஒப்பிடலாம்.
இவ்விரு திறந்த பாரிய நீர் பரப்புகளை இணைத்து நமது தீவுப் பகுதிகளிற்கூடாக கடல் நீரோட்டம் ஓடுகிறது.
இந்த சமுத்திர நீரோட்டமானது ஆண்டு முழுவதும் ஓடுகின்றது. இந்த நீரோட்டங்களால் கடத்தப்படும் சக்தி அளவற்றது. சேது சமுத்திர திட்டம் வெற்றி பெற்றால் இந்த நீரோட்டத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும்.
ஆறுகளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுவது அறிந்ததே. இந்த சமுத்திர நீரோட்டங்கள் இப்படியான ஆறுகள் பலவற்றிற்கு சமானமானவையாகும். இதிலிருந்தே இவற்றின் மின் உற்பத்தி வலு என்ன என்று கணித்துக் கொள்ளலாம்.
தீவுப்பகுதிகளிற்கிடையேயான ஒடுங்கிய கடற்பரப்புகள் இந்த இயக்கச் சக்தியை மின் சக்தியாக மாற்றக் கூடிய விசிறிகளைப் (Turbines) பொருத்தகூடிய தளங்களை வளங்கும்.
இந்த திட்டம் பற்றி போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நமது தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செயக்கூடிய வளம் எம்மிடம் உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக