ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தலைவர் பிரபாகரன், ரணில் மற்றும் ஜெ.வி.பி. ரகசிய கூட்டணி...?

லண்டனில் இலங்கை தூதரகம் முன், இலங்கையின் சுதந்திர..?! தின விழா கொண்டாட்டத்தின் போது இலங்கை தேசிய கொடியினை எரித்து, அல்லது எரிக்க முயன்ற சில இலங்கைவாசிகள் மீது லண்டன் காவல் துறை நடவடிக்கை எடுத்து ஒருவரை கைது செய்து, மற்றவர்களை களைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தது..! இது குறித்து கருத்துக்களை வெளியிட்ட,வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம இவ்வாறு கூறினார். வெளிநாடுகளில் உள்ள, இலங்கையில் இருந்து வெளியேறிய அகதிகளாக குடியேறிய ( இதை இந்த அமைச்சர் மறை பொருளாக குறிப்பிடுகிறார்...ஏன் ? வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே..! ) சிலர் இலங்கை தேசியக் கொடியை எரிக்க முயன்றனர்..இவர்களுக்கு துணையாக ஜெ.வி.பி யினரும், ரணில் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர் என்ற ஒரு பெரிய குற்றச்சாட்டை சுமத்துகிறார் இந்த வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம. மேலும் கூறுகையில், இந்த இருவரும் ( ஜெ.வி.பி. மற்றும் ரணில் கட்சியினர் ) பிராபாகரன் கூட ரகசிய கூட்டு வைத்துள்ளனர் என்றும் தெரிவித்து விட்டு வழக்கம் போல், இவ்வாறு கூறினார். இந்த மூவரும் சேர்ந்து இலங்கையின் ஒற்றுமைக்கும், சுதந்திரத்திற்கும், தேசிய நலனுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக