ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கிளிநொச்சியில் இரண்டு தமிழ் பெண்கள் ஸ்ரீலங்காப்படையினரால் படுகொலை

கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டுபெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள். இவர்களது உடலங்களை மக்கள் இனம்காட்டியுள்ளதுடன் உடலங்களை ஸ்ரீலங்கா காவல்துறையினர் எடுத்துசென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள் இருவர் படுகொலை செய்யபட்டு கிணற்றில் வீசப்பட்டதை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இன்னிலையில் படுகொலை செய்யபட்ட பெண்கள் யார் என இனம்காணமுடியாது உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக