வியாழன், 29 ஜூலை, 2010

6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் ..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார்.

பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து லண்டனில் இருந்து டோவரைச் சென்றடைந்த அவர், பின்னர் கலையில் இருந்து கடந்த திங்கட்கிழமை தனது மனிதநேயப் பயணத்தை தொடர்ந்திருந்தார்.


திங்கட்கிழமை இரவு சில மணி நேரங்கள் 5 கிலோமீற்றர் நடந்த சிவந்தன், செவ்வாய்க்கிழமை 14 மணித்தியாலங்களில் 51 கிலோமீற்றரும், நேற்று 11 மணித்தியாலங்கள் நடந்து 48 கிலோமீற்றர் தூரமும் கடந்துள்ளார்.


கலை பிரதேசத்தில் இருந்து மொத்தம் 32 மணித்தியாலங்கள் நடந்து 115 கிலோமீற்றர் தூரத்தை அவர் இதுவரை கடந்துள்ளார்.


சிவந்தன் பரிஸ் நகரைச் சென்றடைய இன்னும் 185 கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக