வியாழன், 29 ஜூலை, 2010

மலேசியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு!

மலேசியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எஸ்.ஜெயரூபன் மற்றும் டி.சிவஐங்கரன் ஆகிய இரண்டு பேர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இருவரும் மலேசியாவில் தொழிற்சாலை ஊழியர்களாக பணியாற்றி வருவதாகவும் அங்கு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து இரு வாரங்களுக்கு முன் இப்படுகொலையைச் செய்திருக்கின்றார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.


கொல்லப்பட்டவர் கபே ஒன்றின் முகாமையாளர் எனவும். கொல்லப்பட்டவரின் சடலம் கைகள், வாய் ஆகியன நாடாக்களால் கட்டப்பட்ட நிலையில் மலேசிய ஆறு ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக