பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண்ணொருவர் செய்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு தியத்தலாவ இராணுவ பொலிஸாருக்கு உதவுவதற்காக விசேட புலனாய்வுக் குழுவொன்றை இராணுவம் நியமித்துள்ளது.
இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், விசாரணைகள் இன்னும் நடைபெறுவதால் அது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கூற முடியாது எனவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ.ஏ.பி. மெதவல டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
கடந்த மாதம் தனது காதலருடனான பிரச்சினை குறித்து புத்தல பொலிஸில் புகாரிடச் சென்றபோது அங்கிருந்த மூன்று பொலிஸார் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி பெண் புகாரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக