மஹிந்த அமைச்சரவையில் முன்னர் வெளிவிவகாராமைச்சராக இருந்தவரும் தற்போதைய மஹிந்தவின் எதிரியுமான மங்கள சமரவீர அவர்களை கொல்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு படைத்துறையினருக்கு 11 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மல்லி என அழைக்கப்பட்ட ஜி.ஜி.ரணவீர, சம்பத் துசார ஆகியோருக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மங்கள சமரவீரவை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகளுக்கு இவர்கள் இருவரும் தகவல்களை வழங்கியதனை ஒப்புக்கொண்டுள்ளதாக நேற்று நீதிமன்றம் தெரிவித்தது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக