இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே!
வாக்குத் திருவிழா முடிந்தது
போக்குக் காட்டிப் பிடிக்க முனைந்த
வாக்குகள் யாவும் வராமல் போனதால்
சிறிலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
மீண்டும் எங்கும் சோதனைச் சாவடி
ஓமந்தையில் தனிதனித் தனித்தனியாக
உடற் பரிசோதனைக் கெடுபிடி
எடுபிடிகள் ராச்சியத்தில் எதுவுமில்லை
என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட
ராயபக்ஸயாக் கூட்டமது
தமிழ் மக்களைத் தினந்தோறும்
கசக்கிப் பிழிந்து காழ்ப்புணர்வைக் காட்டி
சிங்களத்து வாக்குகளை முழுவதுமாய்
பெறுவதற்காய் வகுக்குமினித் திட்டங்களை…
திட்டங்களில் முதற்பலியாவது தமிழினமே
சம்பந்தருக்குமென்ன சரத்துக்குமென்ன
சாவதும் அழிவதும் யாரோ எவரோதானே!
தமது கோரிக்கையை ஏற்றதாய் கொக்கரிக்கும்
அரசியல் கடைவிரிக்கும் அரசியல் வியாதிகளே
குண்டுச் சட்டிக்குள் குதிரை யோட்டுகின்ற
பண்டைய அரசியலை பாதுகாத்து வளர்ப்பதற்கு
பாவிகளாம் தமிழினத்தை பலியிட வேண்டாமே
புலிகள்தடையென்ற பழையகதை இல்லாத
புதிய சூழலுக்குள் பதவிகளைத் தேடாது
எம்மையழிப்பதற்கு கூட்டிணைந்த உலகமிதை
என்ன முடிவு என்று கேட்பதற்குத் துணியாது
வடவரை நம்புவதும் தென்னவரை தொழுவதும்
புதியதொரு அரசியல் பிழைப்பாகிறதோ ஐயா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக