வியாழன், 4 பிப்ரவரி, 2010

வவுனியாவில் தமிழ்ப்பெண் உட்பட நால்வர் படுகொலை

வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டார். ஏ09 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே மர்மமான முறையில் இறந்துள்ளார். சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக