இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கும் அல்-கய்டா : ஒபாமா
அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதில் அல்-கய்டா உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘யூ டியூப்’ (YouTube) இணையதளத்திற்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில்,
“அல்-கய்டா போன்ற குறிப்பிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவே நாங்கள் (அமெரிக்கா) போர் தொடுத்து வருகிறோம். அமெரிக்கா, நட்பு நாடுகள், ராணுவ தளங்கள், தூதரக அலுவலகங்கள் என உலகம் முழுவதும் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஆனால் இத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் உயிரிழக்கின்றனர் என்பதுதான் சோகமான விடயம். எனவே அல்-கய்டாவை ஒழிப்பதே எங்கள் முக்கிய இலக்கு. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து தரப்பிலும் போராடுவதே அமெரிக்காவின் பணி.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஸ்திரமான முறையில் போராடி வருகிறோம். தற்போது ஏமன், சோமாலியா நாடுகளில் தங்களின் செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை நேச நாடுகளின் உதவியுடன் ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக