வியாழன், 4 பிப்ரவரி, 2010

கிளிநொச்சியில் இருந்து பரந்தன் மனித நடமாட்டமற்ற பகுதியாக உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் பயணம் செய்த ஒருவர் அப்பகுதி எவ்வாறு காட்சியளிக்கிறது என்பதைத் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். தமிழீழத்தின் இதயமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் இப்போது மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது. கட்டடங்களோ ஆளரவம் அற்ற பேய்வீடுகளாக உள்ளன. ஆங்காங்கே கைவிடப்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்தே அங்கு நடந்துள்ள இன அழிப்பு நன்கு புலப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றமான இந்த இன அழிப்பைச் செய்தவர்கள் அதை மறுத்து வருகின்றபோதும், அவர்கள் அதை மறைத்து, இன அழிப்பு குறித்து பேசத் தடைவிதித்து, பல வழிகளில் தமது என்ணத்தை நிறைவேற்றி வருவதாகவே ஈழத்தில் உள்ள மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கருத்தாகும். தற்போது நடந்துவரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அபிவிருத்தி ஆகியனவும் கூட இன அழிப்பின் ஒரு திட்டமே. சர்வதேசநீதியான பொருத்தமான ஒரு தீர்வை விடுத்து சில அரசாங்கங்கள் தமது சொந்த திட்டங்களை தமிழீழத்தில் அமுல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. அதுவும் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசுடன் சேர்ந்து இத்திட்டங்களை அமுல்படுத்துவதானது ஜனநாயகத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது தமிழர் வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக